கற்ற வித்தையைக்
காட்டும் ஏக்கத்தில்
கரைபுரளும் ஊக்கத்தில்
அனைத்தும் அறிந்த
ஆன்றோர் அவையின்
நடு வந்து நிற்கிறான்
கட்டை விரலை
இழந்த பிறகும்
கலங்காத
ஏகலைவன் ......
”இவனுக்கென்ன
முடியுமாம் ”
என்று எழுந்த
குருக்களின் குரல்மூலம்
வெட்டி எறியப்படுகின்றன
அவனின்
மற்ற பிறவிரல்களும் !
No comments:
Post a Comment