Wednesday, April 8, 2015

பிற விரல்கள் :



கற்ற வித்தையைக்
காட்டும் ஏக்கத்தில்
கரைபுரளும் ஊக்கத்தில்
அனைத்தும் அறிந்த
ஆன்றோர் அவையின்
​நடு ​வந்து நிற்கிறான்
கட்டை விரலை
இழந்த பிறகும்
​கலங்காத​
ஏகலைவன் ......

”இவனுக்கென்ன
​முடியுமாம் ​”

என்று எழுந்த
​குருக்களின்​ குரல்மூலம்
வெட்டி எறியப்படுகின்றன
அவனின்
மற்ற பிறவிரல்களும் !

No comments: