இனியொரு விதி செய்ய.. இனியாவது செய்ய...
Tuesday, September 30, 2008
நியாயம் வேணும்
ஊரு பெரிசுங்க ஒண்ணா சேர்ந்து
ஆயிரமாய் செலவு செஞ்சி
வெளிஊர சுத்திட்டு வந்து
சூப்பர் டூருன்னு சொல்ராங்க
வயசு பசங்க நாங்க
ஒரு செலவும் செய்யாம
உள் ஊர சுத்திவந்தா
தண்டச் சோறுன்னு சொல்ராங்க
நீங்களே வந்து இந்த
அநியாயத்த கேளுங்க.
நானும்,எனது மகனும்,அந்த வேப்பமரமும்
முழுப்பரிட்சை முடிஞ்சு வரும்
மூணுமாச விடுமுறைக்காக - அன்று
ஏக்கத்தோடு காத்திருப்போம் நானும்
எங்க வீட்டு வேப்பமரமும்.
குரங்கு போல ஏறி
குதித்து விளையாடி
ஊஞ்சல் கட்டி ஆடி
மஞ்சள் பை முழுவதும்
வேப்பங்கொட்டை பொறுக்கி
வீறுநடை போட்டு
ஐந்து பைசாவுக்குவிற்று
ஐம்பது ரூபாய் சம்பாதித்ததுபோல
ஆனந்தமாய் சுற்றி வருவோம்
அந்த வேப்பமரத்தை.
பரிட்சை முடிந்து - இன்று
பள்ளிக்கு விடுமுறை.
அன்பு மகன்
ஆறே வயதில்
கண்ணாடி மாட்டி
கணினிக்குள்உக்கார்ந்து
புரியாத மொழியில் ஏதேதோ
புதியதாய் செய்துகொண்டே இருக்கிறான்.
வீட்டு வாசலில் அந்த
பரிதாப வேப்பமரம்
ஊஞ்சல் கட்டி ஆட
ஏறி விளையாட
கூடுதல் கிளையோடும்.,
வீதியெங்கும் வாரியிறைத்த
வேப்பங் கொட்டைகளோடும்
ஏக்கத்தோடு யாருக்காகவோ
காத்துக்கொண்டே இருக்கிறது .................
Monday, September 29, 2008
Sunday, September 28, 2008
மீசை முறுக்கும் ரகசியம்
அவசியம் என்ன?
Saturday, September 27, 2008
நியாயம் வேணும்
ஊருக்குத்தான் உபதேசம்
Sunday, September 21, 2008
விதையின் பயணக் குறிப்பு.
விதையாய் தரை புகுந்து
தளிராய் தலை நிமிர்ந்து
கோடையில் கருகாமல்
வாடையில் மருகாமல்
கொத்து கொத்தாய்
கதிர் பிடித்து
அறுவடையில் உதிராமல்
கட்டு கட்டாய்
களம் புகுந்து
போரடிக்கையில்சிதறாமல்
வியாபாரத்தளம் கண்டு
உன் வீடு அடைக்கலம் கொண்டு
சோறாகி இலைக்கு வந்து
பிறவிப் பயன் அடைய இருக்கையில்
மிச்சமாகி
குப்பைக்குப் போனது
அந்த அரிசி
தாய்மொழி உயர்த்து.
என் ஜன்னல் வழியே..
Subscribe to:
Posts (Atom)